பொறியின்மை யார்க்கும் பழியன்று – குறள்: 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
தாள்வினை இன்மை பழி.
– குறள்: 618

– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது.



மு. வரதராசனார் உரை

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.



G.U. Pope’s Translation

‘Tis no reproach unpropitious fate should ban;
But not to do man’s work is foul disgrace to man!

 – Thirukkural: 618, Manly Effort, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.