கல்லான் வெகுளும் சிறுபொருள் – குறள்: 870

Thiruvalluvar

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
குறள்: 870

– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.



கலைஞர் உரை

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம்
காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தால் வரும் எளியவழிப் பொருளோடு பொருந்தாதவனை; ஒரு போதும் புகழ் பொருந்தாது.



மு. வரதராசனார் உரை

கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.



G.U. Pope’s Translation

The task of angry war with men unlearned in virtue’s lore
Who will not meet, glory shall meet him never more.

Thirukkural: 870, The might of Hatred, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.