Thiruvalluvar
திருக்குறள்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை – குறள்: 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். – குறள்: 530 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா – குறள்: 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். – குறள்: 528 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருங்கொடையான் பேணான் வெகுளி – குறள்: 526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குஉடையார் மாநிலத்து இல். – குறள்: 526 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் – குறள்: 525

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். – குறள்: 525 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனைஅடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் [ மேலும் படிக்க …]

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்
திருக்குறள்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் – குறள்: 524

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்பெற்றத்தால் பெற்ற பயன். – குறள்: 524 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும்வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை – குறள்: 523

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. – குறள்: 523 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விருப்புஅறாச் சுற்றம் இயையின் – குறள்: 522

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அறுப்புஅறாஆக்கம் பலவும் தரும். – குறள்: 522 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக்கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பற்றுஅற்ற கண்ணும் பழமை – குறள்: 521

பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. – குறள்: 521 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் அல்லது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

காக்கை கரவா கரைந்துஉண்ணும் – குறள்: 527

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்அன்ன நீரார்க்கே உள. – குறள்: 527 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம்
திருக்குறள்

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் – குறள்: 529

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். – குறள்: 529 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். ஞா. [ மேலும் படிக்க …]