ஒழுக்கம் விழுப்பம் தரலான் – குறள்: 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். – குறள்: 131

– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே
உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.



ஞா. தேவநேயப் பாவாணர்

ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் .



மு. வரதராசனார் உரை

ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.