முயற்சி திருவினை ஆக்கும் – குறள்: 616

முயற்சி திருவினை ஆக்கும் 

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.   –  குறள்: 616

– அதிகாரம்: ஆள்வினை உடைமை,  பால்: பொருள்



கலைஞர் உரை

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும்; அம்முயற்சியில்லாமை ஒருவனை வறுமைக்குட் செலுத்திவிடும்.



மு. வரதராசனார் உரை

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.



G.U. Pope’s Translation

Effort brings fortune’s sure increase,
Its absence brings to nothingness.

– Thirukkural: 616, Manly Effort, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.