மறைந்தவை கேட்கவற் றுஆகி – குறள்: 587

Thiruvalluvar

மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
– குறள்: 587

– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களையும் அவர்க்கு உள்ளாளரைக் கேட்டறிய வல்லனாகி ; தான் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றலுள்ளவனே சிறந்த ஒற்றனாவான்.



மு. வரதராசனார் உரை

மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.



G.U. Pope’s Translation

A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.

 – Thirukkural: 587, Detectives, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.