கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாண்ஆள் பவர். – குறள்: 1017 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளஉயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகமானத்தை விடமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணும் [ மேலும் படிக்க …]
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். – குறள்: 428 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சவேண்டுவதற்கு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment