இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற – குறள்: 698

Thiruvalluvar

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப் படும்.
– குறள்: 698

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்



கலைஞர் உரை

எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவர் எமக்கு இளையவர் என்றும், எமக்கு இன்ன முறையினர் என்றும், மதிப்புக் குறைவாகக் கருதாது; அரசரிடத்து அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு பொருந்த ஒழுகுதல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

(அரசனை) “எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்” என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

Say not, ‘He’s young, my kinsman, ‘despising thus your king; But reverence the glory kingly state doth bring.

 – Thirukkural: 698 , Conduct in Persence of the King, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.