எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் – குறள்: 670

Thiruvalluvar

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
– குறள்: 670

– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்



கலைஞர் உரை

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினை செய்வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை, வேறு எத்தகைய உறுதி உடையவரா யிருப்பினும், உயர்ந்தோர் விரும்பார்.



மு. வரதராசனார் உரை

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.



G.U. Pope’s Translation

The world desires not men of every power possessed,
Who power in act desire not,-crown of all the rest.

 – Thirukkural: 670, Power of Action, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.