அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் – குறள்: 555

Thiruvalluvar

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
– குறள்: 555

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம்.



மு. வரதராசனார் உரை

( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?



G.U. Pope’s Translation

His people’s tears of sorrow past endurance , are not they Sharp instruments to wear the monarch’s wealth away?

 – Thirukkural: 555, The Cruel Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.