Thiruvalluvar
திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் – குறள்: 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். – குறள்: 560 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காத்தற்குரிய அரசன் குடிகளையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முறைகோடி மன்னவன் செய்யின் – குறள்: 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். – குறள்: 559 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கிவைத்து வளம் பெறவும் இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாது உடைமை – குறள்: 558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். – குறள்: 558 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல்ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை (நீதி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே – குறள்: 557

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்அளிஇன்மை வாழும் உயிர்க்கு. – குறள்: 557 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாதஅரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் – குறள்: 555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் – குறள்: 554

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிசூழாது செய்யும் அரசு. – குறள்: 554 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதிஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாள்தொறும் நாடி முறைசெய்யா – குறள்: 553

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாள்தொறும் நாடு கெடும். – குறள்: 553 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேலொடு நின்றான் இடுஎன் – குறள்: 552

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. – குறள்: 552 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொலைவரைத் தண்டிக்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொலைமேற்கொண் டாரின் கொடிதே – குறள்: 551

கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்துஒழுகும் வேந்து. – குறள்: 551 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . பொருளாசையாற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை – குறள்: 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. – குறள்: 556 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் புகழ் [ மேலும் படிக்க …]