துணைநலம் ஆக்கம் தரூஉம் – குறள்: 651

Thiruvalluvar

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
– குறள்: 651

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்;
அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும்; ஆயின் , வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain.

 – Thirukkural: 651, Purity in Action, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.