கல்லாரே ஆயினும் – நாலடியார்: 139

கல்லாரே ஆயினும்

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. – நாலடியார் 139

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்



Teaching

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர்



By Francisco Manuel Blanco (O.S.A.) – Flora de Filipinas […] Gran edicion […] [Atlas II].[1], Public Domain, Link

தொல் சிறப்பின்
ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.



விளக்கம்

பழமையான சிறப்பையும், பளிச்சிடும் நிறத்தையும் உடைய பாதிரிப் பூவை இடுவதால், புதிய மண்பாண்டமும் அதில் உள்ள தண்ணீரும் அப்பூவின் மணத்தைப் பெறும்; அதுபோல, கல்லாதவர்கள் கற்றாரோடு பழகினால், நாள்தோறும் நல்லறிவு பெறுவார்கள்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.