பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பசு

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பசுவே, பசுவே, உன்னைநான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.


வாயால் புல்லைத் தின்கின்றாய்.
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.


சேர்த்து வைக்கும் பாலெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.


கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம் !



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.