கிழமை – பாரதிதாசன் கவிதை
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !
வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment