பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் – குறள்: 505

Thiruvalluvar

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
– குறள்: 505

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்
தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மக்கள் அறிவாற்றல் குணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக்கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லாயிருப்பது ; அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று.



மு. வரதராசனார் உரை

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.



G.U. Pope’s Translation

Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.

 – Thirukkural: 505, Selection and Confidence, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.