உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் – 05 – World Environment Day

Rain

உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் – 05

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. – குறள்: 12

– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்

விளக்கம்:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

இத்தகைய சிறப்புடைய மழை நம் வாழ்வில், வளம் தர, மரம் வளர்ப்போம்; காடுகளைப் பாதுகாப்போம்; மழை நீரைச் சேகரிப்போம்!

Rain

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17

– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்

விளக்கம்:

ஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

கடல் நீர் வளம் குன்றாமல் இருக்க வேண்டுமானால், சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, உலகம் வெப்ப மயமாதலைத் தடுக்க வேண்டும்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.