காக்கை கரவா கரைந்துஉண்ணும் – குறள்: 527

Thiruvalluvar

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. – குறள்: 527

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைக் கரைந்தழைத்து அதனொடு கூடவுண்ணும் ; சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம்.



மு. வரதராசனார் உரை

காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.



G.U. Pope’s Translation

The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet.

 – Thirukkural: 527, Cherishing one’s kindred, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.