Thiruvalluvar
திருக்குறள்

தீயவை செய்தார் கெடுதல் – குறள்: 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று. – குறள்: 208 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்குத் தீமையான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருங்கேடன் என்பது அறிக – குறள்: 210

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்தீவினை செய்யான் எனின். – குறள்: 210 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்குஎந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க – குறள்: 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. – குறள்: 204 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படிநினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் – குறள்: 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. – குறள்: 201 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீவினை என்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலன்என்று தீயவை செய்யற்க – குறள்: 205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. – குறள்: 205 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவனேனும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க – குறள்: 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான் – குறள்: 206 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைப்பகை உற்றாரும் உய்வர் -குறள்: 207

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். -குறள்: 207 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்துவருத்திக்கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். – குறள்: 203 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காதலன் ஆயின்
திருக்குறள்

தன்னைத்தான் காதலன் ஆயின் – குறள்: 209

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்துன்னற்க தீவினைப் பால் – குறள்: 209 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; பிறர்க்குத் தீமை [ மேலும் படிக்க …]

தீயவை தீய பயத்தலால்
திருக்குறள்

தீயவை தீய பயத்தலால் – குறள்: 202

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும். – குறள்: 202 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]