இலன்என்று தீயவை செய்யற்க – குறள்: 205

Thiruvalluvar

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

– குறள்: 205

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்வானாயின் மீண்டும் வறியனாவான்.



மு. வரதராசனார் உரை

`யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.



G.U. Pope’s Translation

Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.

 – Thirukkural: 205, Dread of Evil Deed, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.