அறிவு உடையார் ஆவது அறிவார்
திருக்குறள்

அறிவு உடையார் ஆவது அறிவார் – குறள்: 427

அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்அஃது அறிகல்லா தவர். – குறள்: 427 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்  சிந்திக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய [ மேலும் படிக்க …]

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார்
திருக்குறள்

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் – குறள்: 417

பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்துஈண்டிய கேள்வி யவர். குறள்: 417 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப்  பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள்களைத் [ மேலும் படிக்க …]

அறத்தான் வருவதே இன்பம்
திருக்குறள்

அறத்தான் வருவதே இன்பம் – குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. – குறள்: 39 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மையான நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. ஞா. [ மேலும் படிக்க …]

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
திருக்குறள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை – குறள்: 463

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினைஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். – குறள்: 305 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தனக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]

ஊழி பெயரினும் தாம்பெயரார்
திருக்குறள்

ஊழி பெயரினும் தாம்பெயரார் – குறள்: 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படுவார். – குறள்: 989 – அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சால்பு [ மேலும் படிக்க …]

அரியவற்றுள் எல்லாம் அரிதே
திருக்குறள்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். – குறள்: 443 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் [ மேலும் படிக்க …]

பலசொல்லக் காமுறுவர்
திருக்குறள்

பலசொல்லக் காமுறுவர் – குறள்: 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்றசிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கருதியவற்றைக் [ மேலும் படிக்க …]

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
திருக்குறள்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் – குறள்: 596

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. குறள்: 596 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் [ மேலும் படிக்க …]