வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – குறள்: 120

Thiruvalluvar

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
– குறள்: 120

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே
கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.



மு. வரதராசனார் உரை

பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.



G.U. Pope’s Translation

As thriving trader is the trader known,
Who guards another’s interests as his own.

 – Thirukkural: 120, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.