உருவுகண்டு எள்ளாமை வேண்டும் – குறள்: 667

உருவுகண்டு எள்ளாமை

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சுஆணி அன்னார் உடைத்து.
– குறள்: 667

– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்



கலைஞர் உரை

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உருண்டோடுகின்ற பெரிய தேர்க்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல, வினைத்திறம் மிக்க சிற்றுடம்பினரை இவ்வுலகம் கொண்டுள்ளது; ஆதலால், அத்தகையோரை வடிவின் சிறுமை நோக்கித் தாழ்வாக எண்ண வேண்டா.



மு. வரதராசனார் உரை

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.



G.U. Pope’s Translation

Despise not men of modest bearing;
Look not at form , but what men are;
For some there live, high functions sharing,
Like linch-pin of the mighty car!

 – Thirukkural: 667, Power of Action, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.