தம்பொருள் என்பதம் மக்கள் – குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
குறள்: 63

– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்



கலைஞர் உரை

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் மக்களைத் தம் செல்வமென்று பாராட்டுவர் பெற்றோர்; அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக் கேற்றவாறு வரும்.



மு. வரதராசனார் உரை

தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.



G.U. Pope’s Translation

‘Man’s children are his fortune, ‘ say the wise;
From each one’s deeds his varied fortunes rise.

– Thirukkural: 63, The Wealth of Children, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.