சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். குறள்: 619 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டுஇவ் வுலகு. குறள்: 571 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்டம் என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின். – குறள்: 540 – அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment