
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு. – குறள்: 733
– அதிகாரம்: நாடு, பால்: பொருள்
கலைஞர் உரை
புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக்
கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம்
படைத்ததே சிறந்த நாடாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறநாடுகள் தாங்கிய மக்களும் கால்நடையுமாகிய பொறை யெல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும் அவற்றைத் தாங்கி; அதனால், தன் அரசனுக்கு செலுத்த வேண்டிய புரவுவரி சிறிதுங் குறையாது முன்போன்றே முழுதும் விரும்பிச் செலுத்துவதே (பண்பாட்டிற்கேற்ற) நல்ல நாடாவது.
மு. வரதராசனார் உரை
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.
G.U. Pope’s Translation
When burthens press, it bears; yet, with unfailing hand,
To king due tribute pays: that is the land.
– Thirukkural: 733, The Land, Wealth

 
		 
		
Be the first to comment