பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.      – குறள் – 482

- அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்

கலைஞர் உரை

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

மு. வரதராசனார் உரை

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

உதாரணப்பட விளக்கம்

‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது பழமொழி. காற்று வீசும் காலம் அறிந்து, அதற்கேற்பச் செயல்பட்டால்தான், நெல்லிலிருந்து / தானியத்திலிருந்து, பதர், உமி, வைக்கோல், புல் செத்தை போன்ற பயனற்ற பொருட்களை நீக்க முடியும். அதுபோல, எந்த செயலைச் செய்வதற்கும், அதற்கேற்ற காலத்தை அறிந்து, செயல்பட வேண்டும். காலத்திற்கேற்ற அந்த முயற்சியே, வெற்றியை நழுவ விடாமல் உறுதியாக நமக்குப் பெற்றுத் தரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.