பகல்வெல்லும் கூகையைக் காக்கை – குறள்: 481

Thiruvalluvar

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
– குறள்: 481

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும் ; அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும் .



மு. வரதராசனார் உரை

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்



G.U. Pope’s Translation

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush needs fitting time to fight

 – Thirukkural: 481, Knowing the fitting time, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.