மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி – குறள்: 453

Thiruvalluvar

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
– குறள்: 453

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்
இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொருத்து அமையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.



மு. வரதராசனார் உரை

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.



G.U. Pope’s Translation

Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known.

 – Thirukkural: 453, Avoiding mean Associations, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.