கண்நின்று கண்அறச் சொல்லினும் – குறள்: 184

Thiruvalluvar

கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

– குறள்: 184

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.



மு. வரதராசனார் உரை

எதிரே நின்று கணணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.



G.U. Pope’s Translation

In presence though unkindly words you speak, say not, In absence words whose ill result exceeds your thought.

 – Thirukkural: 184, Not Backbiting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.