இற்பிறந்தார் கண்அல்லது இல்லை – குறள்: 951

Thiruvalluvar

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
குறள்: 951

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்
கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்
பிறந்தவர்களாகக் கருத முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாகவாகா.



மு. வரதராசனார் உரை

நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.



G.U. Pope’s Translation

Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.

Thirukkural: 951, Nobility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.