அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை – குறள்: 247

Thiruvalluvar

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்உலகம் இல்லாகி யாங்கு. – குறள்: 247

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.
அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருட் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக வின்பம் இல்லாததுபோல; அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்ப மில்லை .



மு. வரதராசனார் உரை

பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.



G.U. Pope’s Translation

As to impoverished men this present world is not; The ‘graceless’ in you world have neither part nor lot.

 – Thirukkural: 247, The Possession of Benevolence, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.