Thiruvalluvar
திருக்குறள்

பொருட்பொருளார் புன்நலம் தோயார் – குறள்: 914

பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். – குறள்: 914 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளைமட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக்கருதுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொதுநலத்தார் புன்நலம் தோயார் – குறள்: 915

பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். – குறள்: 915 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள்பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தம்நலம் பாரிப்பார் தோயார் – குறள்: 916

தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிபுன்நலம் பாரிப்பார் தோள். – குறள்: 916 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் – குறள்: 917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்பேணி புணர்பவர் தோள். – குறள்: 917 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு – குறள்: 918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்பமாய மகளிர் முயக்கு. – குறள்: 918 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழகு , [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் – குறள்: 919

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப்பூரியர்கள் ஆழும் அளறு. – குறள்: 919 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச்சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருமனப் பெண்டிரும் கள்ளும் – குறள்: 920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு. – குறள்: 920 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும்,சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரு வேறுபட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உட்கப்படாஅர் ஒளிஇழப்பர் – குறள்: 921

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்கள்காதல் கொண்டுஒழுகு வார். – குறள்: 921 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பதுமட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணற்க கள்ளை உணில்உண்க – குறள்: 922

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். – குறள்: 922 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெறவிரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் – குறள்: 924

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. – குறள்: 924 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளுண்டல் ஆகிய [ மேலும் படிக்க …]