Thiruvalluvar
திருக்குறள்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் – குறள்: 917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்பேணி புணர்பவர் தோள். – குறள்: 917 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு – குறள்: 918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்பமாய மகளிர் முயக்கு. – குறள்: 918 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழகு , [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் – குறள்: 919

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப்பூரியர்கள் ஆழும் அளறு. – குறள்: 919 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச்சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருமனப் பெண்டிரும் கள்ளும் – குறள்: 920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு. – குறள்: 920 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும்,சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரு வேறுபட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உட்கப்படாஅர் ஒளிஇழப்பர் – குறள்: 921

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்கள்காதல் கொண்டுஒழுகு வார். – குறள்: 921 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பதுமட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணற்க கள்ளை உணில்உண்க – குறள்: 922

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். – குறள்: 922 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெறவிரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் – குறள்: 924

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. – குறள்: 924 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளுண்டல் ஆகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கைஅறியாமை உடைத்தே பொருள்கொடுத்து – குறள்: 925

கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்அறி யாமை கொளல். – குறள்: 925 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப்பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாதமூடத்தனமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக்கள்ளால் வரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் – குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுஉண்பார் கள்உண் பவர். – குறள்: 926 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடுகிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் – குறள்: 927

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ஒற்றிக் கண்சாய் பவர். – குறள்: 927 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களதுகண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளை [ மேலும் படிக்க …]