நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் – குறள்: 908

Thiruvalluvar

நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
குறள்: 908

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து
நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்;
நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் விரும்பிய வாறன்றி அழகிய நெற்றியையுடைய தம் மனைவி விரும்பிய வாறே நடப்பவர்;தம் நண்பருக்குத் தேவையானவற்றைச் செய்து தீர்க்க மாட்டார்; அதோடு மறுமைக்குத் தமக்குத் துணையான அறமுஞ் செய்ய மாட்டார்.



மு. வரதராசனார் உரை

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார்.



G.U. Pope’s Translation

Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.

Thirukkural: 908, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.