திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல – குறள்: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – குறள்: 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். – குறள்: 131 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமேஉயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாகாவார் ஆயினும் நாகாக்க – குறள்: 127

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும்.  இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்துன்பத்துக்குக் காரணமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் மக்கள் வேறெவற்றைக் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின் – குறள்: 391

கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. – குறள்: 391 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இணரூழ்த்தும் நாறா மலரனையர் – குறள்: 650

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். – குறள்: 650 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றதைப் பிறர் உணர்ந்து  கொள்ளும்  வகையில்  விளக்கிச்  சொல்ல முடியாதவர்,   கொத்தாக   மலர்ந்திருந்தாலும்   மணம்  கமழாத மலரைப் போன்றவர். ஞா. தேவநேயப் பாவாணர் தாம் கற்று [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் – குறள்: 1033

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர். – குறள்: 1033 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து [ மேலும் படிக்க …]

புறம்தூய்மை நீரான் அமையும்
திருக்குறள்

புறம்தூய்மை நீரான் அமையும் – குறள்: 298

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மைவாய்மையால் காணப் படும். – குறள்: 298 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்வாய்மை வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் [ மேலும் படிக்க …]

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும்
திருக்குறள்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் – குறள்: 123

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்துஆற்றின் அடங்கப் பெறின். – குறள்: 123 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறியத் தக்க [ மேலும் படிக்க …]

திருக்குறள்

செவியுணவின் கேள்வி உடையார் – குறள்: 413

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. – குறள்: 413 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும்  செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார், [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உற்றான் அளவும் பிணிஅளவும் – குறள் 949

உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். குறள்: 949 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோயாளியின்  வயது, நோயின்  தன்மை,  மருத்துவம்  செய்வதற்குரிய நேரம்  என்பனவற்றை  எல்லாம்  மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சித்த [ மேலும் படிக்க …]