திருக்குறள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் – குறள்: 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. – குறள்: 297 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் வாய்மை அறத்தைத் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – குறள்: 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. – குறள்: 322 – அதிகாரம்: அருளுடைமை, பால்: அறம் கலைஞர் உரை இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் கிடைத்த [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வாய்மை எனப்படுவது யாதெனின் – குறள்: 291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். – குறள்: 291 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; அது எவ்வகை [ மேலும் படிக்க …]

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
திருக்குறள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – குறள்: 1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் – குறள்: 69

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய். – குறள்: 69 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை – குறள்: 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லைஅதிர வருவதோர் நோய். – குறள்: 429 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உணர்வது உடையார்முன் சொல்லல் – குறள்: 718

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர் சொரிந்தற்று. – குறள்: 718 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி – குறள்: 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள்: 948 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழிஎன்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் – குறள்: 132

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்தேரினும் அஃதே துணை. – குறள்: 132 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்ததுணை என்பதால்,  எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக்  காக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தை எவ்வகையிலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – குறள்: 428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். – குறள்: 428 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவர்கள்தான்  அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சவேண்டுவதற்கு [ மேலும் படிக்க …]