Thiruvalluvar
திருக்குறள்

உதவி வரைத்தன்று உதவி – குறள்: 105

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து. – குறள்: 105 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச்சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கைம்மாறான [ மேலும் படிக்க …]

பயன்தூக்கார் செய்த உதவி
திருக்குறள்

பயன்தூக்கார் செய்த உதவி – குறள்: 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. – குறள்: 103 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின்காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

தினைத்துணை நன்றி செயினும்
திருக்குறள்

தினைத்துணை நன்றி செயினும் – குறள்: 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். – குறள்: 104 – அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தினையளவினதாகிய சிற்றுதவியையே [ மேலும் படிக்க …]

மறவற்க மாசுஅற்றார் கேண்மை
திருக்குறள்

மறவற்க மாசுஅற்றார் கேண்மை – குறள்: 106

மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்புஆயார் நட்பு – குறள்: 106 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணைநின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொன்றன்ன இன்னா செயினும் – குறள்: 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றும்நன்று உள்ள கெடும். – குறள்: 109 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் [ மேலும் படிக்க …]

செய்யாமல் செய்த உதவிக்கு
திருக்குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு – குறள்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. – குறள்: 101 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி”என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா. [ மேலும் படிக்க …]

நன்றி மறப்பது நன்றுஅன்று
திருக்குறள்

நன்றி மறப்பது நன்றுஅன்று – குறள்: 108

நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லதுஅன்றே மறப்பது நன்று. – குறள்: 108 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் – குறள்: 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. – குறள்: 110 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணப் பெரிய அறங்களைக் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலத்தினால் செய்த நன்றி – குறள்: 102

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. – குறள்: 102 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் [ மேலும் படிக்க …]