Thiruvalluvar
திருக்குறள்

பொறுத்தல் இறப்பினை என்றும் – குறள்: 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று. – குறள்: 152 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறை நன்றாதலால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் – குறள்: 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்தகுதியான் வென்று விடல். – குறள்: 158 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தாரின் தூய்மை உடையர் – குறள்: 159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர். – குறள்: 159 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாது நோற்பார் பெரியர் – குறள்: 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின். – குறள்: 160 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே – குறள்: 155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. – குறள்: 155 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களைஉலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையுள் இன்மை விருந்துஒரால் – குறள்: 153

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. – குறள்: 153 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்கமுடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
திருக்குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் – குறள்: 156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ். – குறள்: 156 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்தஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும். [ மேலும் படிக்க …]

திறன்அல்ல தன்பிறர் செய்யினும்
திருக்குறள்

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் – குறள்: 157

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்துஅறன்அல்ல செய்யாமை நன்று. – குறள்: 157 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தகாத [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல – குறள்: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க …]