Thiruvalluvar
திருக்குறள்

உட்கப்படாஅர் ஒளிஇழப்பர் – குறள்: 921

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்கள்காதல் கொண்டுஒழுகு வார். – குறள்: 921 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பதுமட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணற்க கள்ளை உணில்உண்க – குறள்: 922

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். – குறள்: 922 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெறவிரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் – குறள்: 924

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. – குறள்: 924 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளுண்டல் ஆகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கைஅறியாமை உடைத்தே பொருள்கொடுத்து – குறள்: 925

கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்அறி யாமை கொளல். – குறள்: 925 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப்பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாதமூடத்தனமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக்கள்ளால் வரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் – குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுஉண்பார் கள்உண் பவர். – குறள்: 926 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடுகிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் – குறள்: 927

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ஒற்றிக் கண்சாய் பவர். – குறள்: 927 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களதுகண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

களித்துஅறியேன் என்பது கைவிடுக – குறள்: 928

களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துஒளித்ததூஉம் ஆங்கே மிகும். – குறள்: 928 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது;காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான் . [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

களித்தானைக் காரணம் காட்டுதல் – குறள்: 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ யற்று. – குறள்: 929 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரைகூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கள் உண்ணாப் போழ்தில் களித்தானை – குறள்: 930

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. – குறள்: 930 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? . [ மேலும் படிக்க …]