ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
திருக்குறள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை – குறள்: 463

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினைஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். – குறள்: 305 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தனக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]

ஊழி பெயரினும் தாம்பெயரார்
திருக்குறள்

ஊழி பெயரினும் தாம்பெயரார் – குறள்: 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படுவார். – குறள்: 989 – அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சால்பு [ மேலும் படிக்க …]

அரியவற்றுள் எல்லாம் அரிதே
திருக்குறள்

அரியவற்றுள் எல்லாம் அரிதே – குறள்: 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். – குறள்: 443 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் [ மேலும் படிக்க …]

பலசொல்லக் காமுறுவர்
திருக்குறள்

பலசொல்லக் காமுறுவர் – குறள்: 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்றசிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கருதியவற்றைக் [ மேலும் படிக்க …]

கல்லாரே ஆயினும்
நாலடியார்

கல்லாரே ஆயினும் – நாலடியார்: 139

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. – நாலடியார் 139 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின்நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடுதண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு. விளக்கம் [ மேலும் படிக்க …]

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
திருக்குறள்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் – குறள்: 596

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. குறள்: 596 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் [ மேலும் படிக்க …]

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
திருக்குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் – குறள்: 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலாஊக்கம் உடையான் உழை. – குறள்: 594 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வம் தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு தானாகவே வழி வினவிக்கொண்டு [ மேலும் படிக்க …]

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்
திருக்குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]