உருவுகண்டு எள்ளாமை
திருக்குறள்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் – குறள்: 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை – குறள்: 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். – குறள்: 614 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் [ மேலும் படிக்க …]

ஊழையும் உப்பக்கம் காண்பர்
திருக்குறள்

ஊழையும் உப்பக்கம் காண்பர் – குறள்: 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். – குறள்: 620 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை “ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொருள்கருவி காலம் வினைஇடனொடு – குறள்: 675

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல். – குறள்: 675 – அதிகாரம்: வினை செயல்வகை , பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய [ மேலும் படிக்க …]

திருக்குறள்

துன்பம் உறவரினும் செய்க – குறள்: 669

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றிஇன்பம் பயக்கும் வினை. – குறள்: 669 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

உழுவார் உலகத்தார்க்கு ஆணி
திருக்குறள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து. – குறள்: 1032 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள்: 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நாநலம் என்னும் நலனுடைமை – குறள்: 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 641 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்: 642

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் அரசனுக்கு அவன் [ மேலும் படிக்க …]