குணன்இலனாய் குற்றம் பலஆயின் – குறள்: 868

Thiruvalluvar

குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து.
குறள்: 868

– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.



கலைஞர் உரை

குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,
அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் அவனிடத்துள்ள குற்றங்கள் மட்டும் பலவாயிருப்பின் அவன் துணையில்லாதவனாவன்; அந்நிலைமை அவன் பகைவர்க்கு அரணாதலையுடைத்து.



மு. வரதராசனார் உரை

ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.



G.U. Pope’s Translation

No gracious gifts he owns, faults many cloud his fame: His foes rejoice, for none with kindred claim.

Thirukkural: 868, The might of Hatred, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.