எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று – குறள்: 1080

Thiruvalluvar

எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. – குறள்: 1080

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,
தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய
தகுதியாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- ஏதேனுமொரு துன்பம்நேர்ந்தவிடத்து அதைச் சாக்கிட்டுத் தம்மை விரைந்து பிறருக்கு விற்றற்கே யுரியர்.



மு. வரதராசனார் உரை

கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.



G.U. Pope’s Translation

For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!

 – Thirukkural: 1080, Baseness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.