அழிவுஇன்று அறைபோகாது ஆகி – குறள்: 764

Thiruvalluvar

அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்க ணதுவே படை.
– குறள்: 764

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,
பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போரின் கண் தோல்வியடைதலின்றி; பகைவரால் எங்ஙனமுங் கீழறுக்கப் படாததாய்; தொன்று தொட்டுத் தலைமுறையாக வளர்ந்து வந்த வன்மறத்தை யுடையதே; சிறந்த படையாவது.



மு. வரதராசனார் உரை

(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்..



G.U. Pope’s Translation

That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.

 – Thirukkural: 764, The Excellence of an Army, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.