Thiruvalluvar
திருக்குறள்

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – குறள்: 995

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. – குறள்: 995 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் – குறள்: 996

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன். – குறள்: 996 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அரம்போலும் கூர்மைய ரேனும் – குறள்: 997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கள்பண்பு இல்லா தவர். – குறள்: 997 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும்,மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மாந்தர்க்குரிய பண்பில்லாதவர்; அரத்தின் கூர்மை போலுங் கூரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நண்புஆற்றார் ஆகி நயம்இல – குறள்: 998

நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்பண்புஆற்றா ராதல் கடை. – குறள்: 998 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்துகொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு – குறள்: 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள். – குறள்: 999 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பதுபகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மிகப்பெரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் – குறள்: 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். – குறள்: 1001 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு.அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈட்டம் இவறி இசைவேண்டா – குறள்: 1003

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை. – குறள்: 1003 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாகஇருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு போட்டியிட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் – குறள்: 1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்றுஈதல் இயல்பு இலாதான். – குறள்: 1006 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும்இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத்தொற்றிக்கொண்ட நோயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் – குறள்: 1007

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. – குறள்: 1007 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்தஅழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் [ மேலும் படிக்க …]