Thiruvalluvar
திருக்குறள்

தக்காங்கு நாடி தலைச்செல்லா – குறள்: 561

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – குறள்: 561 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் – குறள்: 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். – குறள்: 510 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் – குறள்: 501

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்திறம்தெரிந்து தேறப் படும். – குறள்: 501 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நல்ஆண்மை என்பது ஒருவற்குத்
திருக்குறள்

நல்ஆண்மை என்பது ஒருவற்குத் – குறள்: 1026

நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்ஆண்மை ஆக்கிக் கொளல். – குறள்: 1026 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; [ மேலும் படிக்க …]

இன்பம் ஒருவற்கு இரத்தல்
திருக்குறள்

இன்பம் ஒருவற்கு இரத்தல் – குறள்: 1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். – குறள்: 1052 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்துபெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்றி அமையாச் சிறப்பின – குறள்: 961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். – குறள்: 961 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெளிவு இலதனைத் தொடங்கார் – குறள்: 464

தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்ஏதப்பாடு அஞ்சு பவர். – குறள்: 464 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொச்சாப்புக் கொல்லும் புகழை – குறள்: 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்சம் நிரப்புக்கொன் றாங்கு. – குறள்: 532 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போலமறதி, புகழை அழித்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; மறதி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறந்த வெகுளியின் தீதே – குறள்: 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியின் சோர்வு. – குறள்: 531 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; அரசனுக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் – குறள்: 496

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. – குறள்: 496 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர் கடலிலே ஓடாது’ ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]