Thiruvalluvar
திருக்குறள்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் – குறள்: 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 166 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் – குறள்: 165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்கியும் கேடு ஈன்பது. – குறள்: 165 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறுபகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவர் கேடு செய்யத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் – குறள்: 163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்பேணாது அழுக்கறுப் பான். – குறள்: 163 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை – குறள்: 162

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின். – குறள்: 162 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் – குறள்: 161

ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தாரின் தூய்மை உடையர் – குறள்: 159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர். – குறள்: 159 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாது நோற்பார் பெரியர் – குறள்: 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின். – குறள்: 160 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே – குறள்: 155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. – குறள்: 155 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களைஉலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையுள் இன்மை விருந்துஒரால் – குறள்: 153

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. – குறள்: 153 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்கமுடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

புத்தேள் உலகத்தும் ஈண்டும்
திருக்குறள்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் – குறள்: 213

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதேஒப்புரவின் நல்ல பிற. – குறள்: 213 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்தபண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவு [ மேலும் படிக்க …]