Thiruvalluvar
திருக்குறள்

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக – குறள்: 861

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. – குறள்: 861 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதேபகைமாட்சி எனப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் – குறள்: 862

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. – குறள்: 862 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; சிறந்த துணையில்லதவனாகவும், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஞ்சும் அறியான் அமைவுஇலன் – குறள்: 863

அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. – குறள்: 863 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போருக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நீங்கான் வெகுளி நிறைஇலன் – குறள்: 864

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. – குறள்: 864 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தை விடாதவனாகவும்; அடக்கமில்லாதவனாகவு [ மேலும் படிக்க …]