தவமும் தவம்உடையார்க்கு ஆகும் – குறள்: 262

Thiruvalluvar

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது. – குறள்: 262

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும் ;ஆதலால் , அத் தவத்தை முறபிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.



மு. வரதராசனார் உரை

தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.



G.U. Pope’s Translation

To ‘penitents’ sincere avails their ‘Penitence’;
Where that is not, ’tis but a vain pretence.

 – Thirukkural: 262, Penance, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.